குரூப் 2 முதன்மை தேர்வு சான்றுகளைப் பதிவேற்ற நாளை கடைசி நாள் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி -II மற்றும் IIA பணிகள்) -இல் அடங்கிய பதவிகளில் நேரடி நியமானத்திற்கான அறிவிக்கை 20.06. 2024 அன்று தேர்வாணைய வலைதளத்தில் வெளியிட்டது.

 இத்தேர்விற்கான முதல்நிலை எழுத்து தேர்வு 14.09.2024 அன்று முற்பகல், 38 மாவட்ட மையங்களில் நடைபெற்றது. 

தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில் 5,83,467தேர்வர்கள் தேர்வு எழுதினார். 

தொகுதிஐ ஐ ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில், தாள் -II -ற்கான தேர்வு மையங்கள், 20 -லிருந்து 38 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது .

எனவே தொகுதி IIA பணிகளுக்கான முதன்மை தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், தாள் -II-ற்கான தேர்வு மையத்தை, 14.12.2024 முதல் 18.12.2024 வரை, ஒருமுறை பதிவு தளத்தின் மூலம் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கியமான இணைப்புகள்: 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இணையதள இணைப்பு
ஒரு முறை பதிவு இணைப்பு:  பதிவு இணைப்பு

1 thought on “குரூப் 2 முதன்மை தேர்வு சான்றுகளைப் பதிவேற்ற நாளை கடைசி நாள் ”

Leave a Comment